பதிவு போடும் ஆசாமிகள் தங்கள் இஷ்டத்துக்கு பதிவு போட்டுவிட்டு என்னாச்சு படிச்சீங்களான்னு கேட்டா 'போயாங்க' ன்னு ஒரு ஆத்திரம் வருது... மனுஷன்னா ஒரு இது வேணும்.. தோணும்போது டைரி எழுதற மாதிரி இல்ல இது.. இதுக்குன்னு மெனக்கெட்டு எழுதணும். மோண்டது, பேண்டதேல்லாம் எழுதி சாவடிக்காட்டாலும் நல்லது தோணும்போது எழுத சோம்பேறித்தனப்பட்டு விட்டு விட்டால் அப்புறம் முக்கினாலும் வருவதில்லை..
சாதகம் பண்ணாம ஒருநாள் விட்டு விட்டாலும் அது பாட்டை படுத்தி எடுத்துவிடும்.
பித்தளை பாத்திரத்தை விளக்காமல் விட்டுட்டா என்னாகும்?. எத்தனை நாள் விட்டோமோ அத்தனை அளவு மெனக்கெட்டால் தான் பழைய ஸ்திதிக்கு வரும்.
எங்க பாட்டு ஆசாமிகள் மத்தியில் கேட்கும் முதல் கேள்வி 'பாடிட்டு இருக்கீங்களா'.
என்பது தான். நம்ம சௌக்கியமான்னு கேட்கிறமாதிரிதான்.
அப்புறம் பாத்துக்கலாம்.
வியாழன், 10 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக