......

அன்புடன் சோமன்.....

வெள்ளி, 13 நவம்பர், 2009

உதகையின் நிலச்சரிவு நிகழ்வுகளை நினைத்து கொஞ்சம் மனம் நொந்தேன். இப்போது அங்கு சரிந்து கிடக்கும் பகுதிகளில் தான் நான் போன வாரம் பூராவும் திரிந்து விட்டு வந்திருந்தேன் .
கொத்திக்கொத்தி நிலப்பரப்புகளை நீடித்துக்கொண்டே போகும் மனிதப்பேய்களின் பேராசையால்
மலைகளின் ராணி வன்கலவி செய்யப்படுவதை உணர்ந்து வேதனை கொண்டேன்.

உதகையின் அந்த சின்ன ரயிலில் சன்னலோரம் எக்கிக்கொண்டு செல்வது எனக்கு இஷ்டம் எப்பவும். ஈரோட்டுக்குபோகும் போதெல்லாம் என் பயணத்திட்டத்தில் தவறாமல் இருப்பது உதகை. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால் அங்கிருந்து அதிகாலை ஏழரை மணிக்கு கிளம்பும் அந்த சின்ன ரயிலுக்கு ஏக கூட்டம். இருந்தும் நிச்சயம் அந்த வண்டியில் வாய்ப்பு நிச்சயம்.

0 கருத்துகள்: