......

அன்புடன் சோமன்.....

திங்கள், 21 ஜூலை, 2008

வரிந்து கட்டுவது என்றொரு பிரயோகம் உண்டு. நம்மூர் குழாயடிசண்டை மட்டுமல்ல, சில சமயம் ஒரு திடீர் விருந்தாளி கும்பல் வந்துவிட்டாலோ பெரிய திருமண வீடுகளில் சாப்பாடு தீர்ந்து போகும்போது கூட்டம் வந்துவிட்டாலோ நம் வீட்டு பெண்மணிகள் ஒரு அவதாரம் எடுப்பார்கள். புடவையை அள்ளி செருகிக்கொண்டு தள்ளிக்குங்க என்று அவர்கள் புறப்படுவது பார்க்க அழகாக இருக்கும். எங்க ஊர்க்கிழவி நாங்கள் எல்லாம் லீவில் போயி இறங்கும் போதெல்லாம் ' வந்திருச்சுகள் பீடைகள் ' என்றவாறே எட்டு ஊருக்கு சமைக்கும்.

பிதாமகன் படத்தில் சிம்ரன் ஷூட்டிங் கிட்னாப்பின் போது குத்தாட்டம் போட புறப்பட்டு வருவார் பாருங்கள்.
வேதகோஷம் முழங்க அதை படமாக்கியிருப்பார் பாலா. அருமையான இடம்.

0 கருத்துகள்: